தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒருங்கிணைந்த போட்டி தேர்வு துவக்கம்: 112 மையங்களில் 40 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

ஒருங்கிணைந்த போட்டி தேர்வு துவக்கம்: 112 மையங்களில் 40 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

ஒருங்கிணைந்த போட்டி தேர்வு துவக்கம்: 112 மையங்களில் 40 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்


UPDATED : ஆக 20, 2026 10:01 PM

ADDED : ஆக 20, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 10:01 PM ADDED : ஆக 20, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் தேர்வு அமைப்பால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைக்கான பல்வேறு பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 21ல் துவங்கி 23ம் வரை நடக்கிறது.

புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 112 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 40,000 பேர் எழுதுகின்றனர்.

தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த போட்டி தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அசல் அடையாளச் சான்றைக் கொண்டு வர வேண்டும்.

தேர்வர்களுக்குக் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படும். தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மையத்தின் முதன்மை நுழைவு வாயில் மூடப்படும்.

கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே அனுமதிக்கப்படும். மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், புளூடூத், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டால் காவல் துறை வழக்குப்பதிவு மற்றும் தேர்வெழுதத் தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஹால் டிக்கெட்டை இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சந்தேகங்களுக்கு 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு கால அட்டவணை: இன்று 21 ம்தேதி காலை 9:00 முதல் - 11:00 மணி வரை புள்ளியியல் ஆய்வாளர், மதியம் 12:30 - 2:30 நுாலக மற்றும் தகவல் உதவியாளர் பணிக்கும், மாலை 4:00 - 6:00 மணி வரை கள மேற்பார்வையாளர் பணிக்கும் போட்டி தேர்வு நடக்கிறது. அனைவருமே வினாத்தாள்-2பியை எழுதுகின்றனர். நாளை 22ம் தேதி காலை 10:00 - 12:00 மணி வரை வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் (பொறியியல்) பணிக்கும், மதியம் 2:30 - 4:30 மணி வரை வேளாண்மை அலுவலர் (நீரியல் புவியியல்) மற்றும் தொழில்நுட்ப அலுவலர் பணிக்கு போட்டி தேர்வு நடக்கிறது. இவர்களும் வினாத்தாள் -2 பியை எழுதுகின்றனர். 23ம் தேதி காலை 10:00 - 12:00 மணி வரை அனைத்து 8 பதவிகளுக்குமான பொதுத் தேர்விற்கான வினாத்தாள்-1ஐ எழுகின்றனர். மதியம் 2:30 - 4.30 மணி வரை யு.டி.சி., பணிக்கு போட்டி தேர்வு நடக்கிறது. வினாத்தாள்-2 எழுகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us