/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம் இன்று செயல்படும் ஆணையர் தகவல்
/
உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம் இன்று செயல்படும் ஆணையர் தகவல்
உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம் இன்று செயல்படும் ஆணையர் தகவல்
உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம் இன்று செயல்படும் ஆணையர் தகவல்
ADDED : டிச 28, 2025 05:39 AM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம், இன்று (ஞாயிற்று கிழமை) செயல்படும் என, ஆணையர் சுரேஜ்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள் 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துவதற்கு ஏதுவாக 2025ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள வீட்டு வரி வசூல் மையம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
அது சமயம், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டுவரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள் 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியில் பி.பி.பீ.எஸ்., மூலமாகவும், கூகுல் பே, போன் பே, மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் வீட்டு வரி, சொத்துவரியை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

