
கழிவுநீர் தேக்கம்
ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர், 12வது குறுக்கு தெருவில், காலிமனையில், கழிவுநீர் தேங்கி கொசு அதிகமாக பரவி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.
ராஜேந்திரன், ரெட்டியார் பாளையம்.
-------------------------------------------------------------------நைனார்மண்டபம் சுதானா நகர் பாவாணர் வீதியில், கழிவுநீர் சாலையில், தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
ஜீவா, நைனார்மண்டபம்.
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வடக்கு சர்வீஸ் ரோட்டில், கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
குமார், அரும்பார்த்தபுரம்.
காலிமனை புதர்களால் அச்சம்
வம்பாகீரப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவில் காலி மனையில், புதர்கள் மண்டி கிடப்பதால், விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது.
பாண்டியன், வம்பாகீரப்பாளையம்.
விபத்து அபாயம்
கடலுார் சாலை, முருங்கப்பாக்கம் தனியார் கார் கம்பெனி எதிரே மெகா பள்ளம் இருப்பதால், பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து வருகின்றனர்.
ரமேஷ், புதுச்சேரி.