தேரடி வீதியில் ஆக்கிரமிப்பு
வில்லியனுார் தேரடி வீதியில், ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மீனா, வில்லியனுார்.
தெரு விளக்கு எரியுமா?
அபிேஷகப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே தெருவிளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
முத்தமிழ், அபிேஷப்பாக்கம்.
நோயாளிகள் அவதி
நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், போதுமான மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சக்தி, நெட்டப்பாக்கம்.
சுகாதாரசீர்கேடு
தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கணேசன், தவளக்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
வீராம்பட்டினம் சாலையில், வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மதிவாணன், வீராம்பட்டினம்.
மேம்பாலத்தில் விளக்கு எரியவில்லை
புதுச்சேரி ரயில்வே மேம்பாலத்தில் சில இடங்களில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் மேம்பாலம் இருண்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது.
வேல், புதுச்சேரி.