UPDATED : ஜூலை 19, 2026 05:45 PM
ADDED : ஜூலை 19, 2026 05:41 PM
கரிக்கலாம்பாக்கம் - தனிகுப்பம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராஜன், கரிக்கலாம்பாக்கம்.
நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
லட்சுமி, தட்டாஞ்சாவடி.
'குடிமகன்'களால் அச்சம்
நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பழைய பாலத்தில் இரவில் மது குடிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கவிச்செல்வன், நோணாங்குப்பம்.
சாலை ஆக்கிரமிப்பு
திலாசுபேட்டை, சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேன்மொழி, திலாசுபேட்டை.
மீன் கடைகளால் நெரிசல்
உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காந்தி, உப்பளம்.
போக்குவரத்து இடையூறு
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ராஜேஷ், மரப்பாலம்.
