ADDED : ஜூலை 31, 2026 06:34 AM
நாய் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
லட்சுமி, தட்டாஞ்சாவடி.
சாலை ஆக்கிரமிப்பு
திலாசுபேட்டை சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேன்மொழி, திலாசுபேட்டை.
குடிமகன்களால் அச்சம்
நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பழைய பாலத்தில் இரவில் குடிமகன்கள் மது குடிப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கவிச்செல்வன், நோணாங்குப்பம்.
போக்குவரத்துக்கு இடையூறு
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்து நடக்கிறது.
சாந்தி, மரப்பாலம்.
டவுன் பஸ் தேவை
தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் நடந்து செல்கின்றனர்.
சரவணன், தேங்காய்திட்டு.
குண்டும் குழியுமான சாலை
மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஸ்ரீகாந்த், மேட்டுப்பாளையம்.
