ADDED : பிப் 01, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் சுவாமிநாதனுக்கு பாராட்டு விழா நடந்தது.
கூட்டமைப்பு தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் பணி ஓய்வு பெறும் துணை முதல்வர் சுவாமிநாதனுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
விழாவில், பிரபாகர், பூங்குன்றன், நடேசன், தீர்க்கசுபா, தணிகை மணி, கீதாபிரியா, கார்த்திக் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.