ADDED : மார் 02, 2026 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காரைக்கால் பொதுப்பணித்துறையில் கட்டடங்கள் மற்றும் சாலைகள் பிரிவுஇளநிலை கணக்கு அதிகாரி கலியமுருகனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு வளாகத்தில் நடந்தது.
நாஜிம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் (ஓய்வு) மகேஷ், செயற்பொறியாளர் அருளரசன், உதவி பொறியாளர்கள் வேலுமணி, ராஜசேகர், மாலைமணி, சந்திரமோகன், ஊழியர்கள் ரவி, விஜய்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ராமன், அய்யனார், சரவணன், பரசுராமன்,இளநிலை கணக்கு அதிகாரி கலிய முருகனை வாழ்த்தினர். கலியமுருகன் 36 ஆண்டுகள் அரசுப்பணியில் 24 ஆண்டுகள் சட்டசபையிலும், மின்துறையில் 7 ஆண்டுகள், அமைச்சக அலுவலகத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றினர்.

