/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., - தி.மு.க., தொகுதி உடன்பாடு
/
காங்., - தி.மு.க., தொகுதி உடன்பாடு
ADDED : மார் 21, 2026 04:21 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 'இண்டி' கூட்டணியில் காங்., மற்றும் தி.மு.க., இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த கூட்டணி பேச்சு வார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்து, இரு கட்சிகளுக்கும் தலா 14 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தொகுதிகளை பிரிப்பதில் காங்., - தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிட்ட காங்., இந்த முறை யும் அதிக இடங்களை கோரியது. ஆனால், தி.மு.க., தரப்பில் சரிசமமான இடங்கள் வேண்டும் என, கேட்டகப்பட்டதால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது.
நேற்று தி.மு.க., சார்பில் நடந்த இறுதிக்கட்ட ஆலோசனையில் சுமூக முடிவு எட்ட ப்பட்டது. அதன்படி காங்., - 14 தொகுதிகள், தி.மு.க., - 14 தொகுதிகள், வி.சி.க., , கம்யூ., தலா 1 தொகுதி என முதற்கட்டமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலை யில், எந்தெந்த தொகுதிகளை யார் யார் போட்டியிடுவார்கள் என, இறுதி செய்யும் பணி இன்று நடக்கும் என, தெரிகிறது.

