தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., சார்பில் தீப்பந்த ஊர்வலம்
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., சார்பில் தீப்பந்த ஊர்வலம்
ADDED : ஆக 18, 2025 04:08 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி காங்., சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து தீப்பந்த ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு, மாநில காங்., சீனியர் துணை தலைவரும், காமராஜர் நகர் தொகுதி பொருப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார்.
மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட காங்., நிர்வாகிகள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி தீ பந்தம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் காமராஜர் நகர் தொகுதி காங்., அலுவலகத்தில் துவங்கி அவ்வைதிடல் ஜீவனந்தம் சிலை அருகில் முடிவடைந்தது.
