sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜ்பவன் தொகுதியில் காங்., மகளிர் ஆலோசனை கூட்டம் 

/

ராஜ்பவன் தொகுதியில் காங்., மகளிர் ஆலோசனை கூட்டம் 

ராஜ்பவன் தொகுதியில் காங்., மகளிர் ஆலோசனை கூட்டம் 

ராஜ்பவன் தொகுதியில் காங்., மகளிர் ஆலோசனை கூட்டம் 


ADDED : மார் 03, 2026 04:17 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் காங்., கமிட்டி சார்பில் மூன்றாவது நாளாக குமரகுரு பள்ளம் பகுதியில் மகளிர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாநில செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். இதில், குமரகுரு பள்ளம் அரசு குடியிருப்பு, அந்தோனியார் கோயில் வீதி, மீரான் சாகிப் வீதி ஆகிய பகுதிகளை சார்ந்த 700 மகளிர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

அதற்கு, காங்., மாநில செயலாளர் குமரன், நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ள சமுதாயக்கூடத்தை திறந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு ஒப்படைக்கப்படும். சமுதாயக்கூடம் அருகே ஆரோ பிளான்ட் அமைத்து தரப்படும். ராஜ்பவன் தொகுதியிலேயே வருவாய் அலுவலகம், அரசு இடத்தில் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்தால், ஓரிரு மாதங்களில் இவை அனைத்தும் செய்து தரப்படும் என்றார்.

தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு ரூ. 1.5 லட்சம் செலுத்த வேண்டும் என குடிசை மாற்று வாரியம் கூறியுள்ளது. எங்களால் அந்த பணத்தை கட்ட முடியாமல் பல பேர் வீடு வாங்காமல் உள்ளதாக கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து கட்சியின் தலைமையிடம் தெரிவித்து நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவிதை்தார்.

. கூட்டத்தில், பங்கேற்ற அனைத்து மகளிர்களுக்கும் பட்டுப்புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதில், மாநில செயலாளர் ராஜாராம், நிர்வாகிகள் முரளி, மனோகர், மோகனசுந்தரம், ஜெரால்ட் சார்லஸ், குப்பன், தமிழ்ச்செல்வன், சித்தானந்தன், மருவின், தினகர், சதீஷ், பிரசாந்த், சதீஷ்குமார் வினோலா மேரி, விஜயா, அமுதவல்லி, பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us