ADDED : பிப் 28, 2026 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: அரியூரில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
அரியூரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர்கள் சுந்தரி, சிவானந்தம், இளநிலை பொறியாளர் கார்த்திக், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், உதவி பொறியாளர் சத்தியநாராயணன், இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் பங்கேற்றனர்.

