/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி ஆலோசனைக் கூட்டம்
/
பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி ஆலோசனைக் கூட்டம்
ADDED : பிப் 10, 2026 05:09 AM

புதுச்சேரி: சென்னை தேசிய பாதுகாப்புப் படை, இந்திய விமானப்படை, புதுச்சேரி காவல்துறை, மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து, புதுச்சேரி மற்றும் ஆரோவில் டவுன்ஷிப் பகுதிகளில் மூன்று நாட்கள் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சார்பு கலெக்டர் இஷிதா ரதி, தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் முதுநி லை காவல் கண்காணிப் பாளர், காவல்துறை, நக ராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறை. சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டுப் பயிற்சியில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் நிர்வாக பொறுப்பில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பயிற்சி செயல்பாட்டு தயார் நிலையை மேம்படுத்துதல், கூட்டுத்திறனை மேம்படுத்துதல், மாநில காவல்துறை படைகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை வலுப்படுத்துதல், பகல் மற்றும் இரவு நேரங்களில் ஹெலிகாப்டர்களில் இருந்து சறுக்குதல் மற்றும் நெருங்கிய தூண்டுதல், வெடிகுண்டு அகற்றும் நடைமுறைகள் மற்றும் அடர்த்தியான நகர்ப்புற சூழல்களில் பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி நிலையான இயக்க நடைமுறைகளை சரிபார்த்தல், ஒருங்கிணைப்பு வழிமுறைகளை சோதித்தல் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட பகுதிகளில் செயல்பாட்டு சவால்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

