sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்

/

ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்

ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்

ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்


ADDED : நவ 10, 2024 04:39 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருந்தது குறித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள இந்தியன், எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி., மற்றும் யூ.சி.ஓ., ஆகிய 4 வங்கிகளில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பணம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பணத்தை கணக்கீடு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அதில் இருந்த 500 ரூபாய் கட்டுகளில் 55 கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.

இதுகுறித்து சென்னை ரிசர்வ் வங்கியின் மேலாளர் அபிஷாக் சிங்கிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, அபிஷாக் சிங் இச்சம்பவம் குறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் நேற்று முன்தினம் (8 ம் தேதி) புகார் அளித்தார்.

அதன்பேரில், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கள்ள நோட்டுகள் விவகாரம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us