ADDED : ஏப் 27, 2026 06:12 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கோர்ட் உத்தரவின்படி ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்பட்டது.
அம்பலத்தடையார் மடத்து வீதியில் பல ஆண்டுகளாக தனியார் கட்டடத்தின் வாயிலில் நடைபாதை ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததது. ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த ஜனவரி 21ம் தேதி கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் கோர்ட் உத்தரவின் படி நேற்று புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித் தலைமையில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்பட்டது.
பொக்லைன் இயந்திரம் மூலம் புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்போது, அங்கு வந்த ஆக்கிரமிப்பாளர்கள், புதுச்சேரி நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
