/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் மோசடி கும்பல் அட்டகாசம்; ரூ.12.63 லட்சம் 'அபேஸ்'
/
சைபர் மோசடி கும்பல் அட்டகாசம்; ரூ.12.63 லட்சம் 'அபேஸ்'
சைபர் மோசடி கும்பல் அட்டகாசம்; ரூ.12.63 லட்சம் 'அபேஸ்'
சைபர் மோசடி கும்பல் அட்டகாசம்; ரூ.12.63 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூலை 25, 2025 11:18 PM
புதுச்சேரி; புதுச்சேரியில் 4 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.12.63 லட்சம் ஏமாந்தனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்த நபரை, தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். மேலும், அது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றிலும், அவரை மர்ம நபர் இணைத்துள்ளார். வாட்ஸ் ஆப் குரூப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு அதிகஅளவில் லாப பணம் வருவதாக பதிவிட்டுள்ளனர்.
இதைநம்பி, மர்மநபர் ஆன்லைன் டிரேடிங்கில் 12 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளார். அதற்கான லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், கோவிந்தசாலையை சேர்ந்த பெண் 20 ஆயிரத்து 760, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 12 ஆயிரத்து 126, பாகூரைச் சேர்ந்த நபர் 14 ஆயிரம் என, மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 12 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.