/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் சைபர் கும்பல் ரூ. 2.57 லட்சம் மோசடி
/
2 பேரிடம் சைபர் கும்பல் ரூ. 2.57 லட்சம் மோசடி
ADDED : நவ 04, 2025 01:43 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 2.57 லட்சம் இழந்துள்ளனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வீட்டில் இருந்தபடி வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 2 லட்சம் மு தலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 57 ஆயிரத்து 612 என 2 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 612 ரூபாய் இழந்துள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

