தீவிரவாதத்திற்கு ஆதரவாக பதிவு; சைபர் கிரைம் போலீசில் புகார்
தீவிரவாதத்திற்கு ஆதரவாக பதிவு; சைபர் கிரைம் போலீசில் புகார்
ADDED : ஏப் 30, 2025 07:02 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சமூக வலை தளங்களில் பதிவு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., நகர, மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகார்;
காஷ்மீர் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை, அரசியல் ஆதாயத்திற்கும், தீவிரவாத்திற்கு ஆதரவாக மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில்குமார், புதுச்சேரி யூத் காங்., உறுப்பினர் துரைராஜ், குத்புதின், சாதிக் பாஷா, சாகுல் அமீத் ஜியாரஜி ஆகியோர், பேஸ் புக் போன்ற சமூக வலை தளங்களில் ஆதரவாக செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இவர்கள் மீது வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
