/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடனமாடி போக்குவரத்தை சரிசெய்து வரும் போலீஸ்
/
நடனமாடி போக்குவரத்தை சரிசெய்து வரும் போலீஸ்
ADDED : ஜன 21, 2024 04:28 AM
புதுச்சேரி: புதுச்சேரி நகர சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் அவதிப் பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு உதவியாக முக்கிய இடங்களில் ஐ.ஆர். பி.என்., போலீசார் நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.ஆர்.பி.என்., போலீஸ் ஏட்டு ஆனந்தவேலு என்பவர் இந்திரா சிக்னலில் நடனமாடி கைகளை அசைத்து, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். அவரது செயல்பாடு வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர், சுறு சுறுப்பாக போக்குவரத்தை சரி செய்யும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

