ADDED : ஆக 14, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சேதராப்பட்டு அருகே காட்ராம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் மனைவி காயத்திரி, 33. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து, சேதராப்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், டியூஷனில் படிக்கும் மகன், மகளை அழைக்க கடந்த 11ம் தேதி சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தந்தை ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.