ADDED : ஜூலை 15, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : அதிகமாக மது குடித்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
தவளக்குப்பம் அடுத்த பூராணங்குப்பம் ஐய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன், 55, இவர் அதிகமாக மது குடித்து வந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் அறிவுறுத்தியும் தொடர்ந்து மது குடித்தால், நேற்று முன்தினம் சுயநினைவின்றி வீட்டில் விழுந்து கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த, டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.