ADDED : ஜூன் 13, 2025 03:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்த இரண்டு நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அண்ணா சாலை வெள்ளாழ வீதி அருகே அடையாளம் தெரியாத 57 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 8ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.அதே போல, காமராஜ் சாலை, வீமன் கவுண்டபாளையம் சாலையில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என, டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.