நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; ரெட்டியார்பாளையம், மரியாள் நகர் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் பிரிஜித்தா, 46.
இவர், கடந்த 1ம் தேதி இரவு 9:00 மணிக்கு தெரு நாய்களுக்கு உணவு வைத்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி, 47, என்பவர் ஏன் நாய்களுக்கு சாப்பாடு வைக்கிறராய், என கேட்டு அவரிடம் தகராறு செய்தார். அவர் மீது பைக்கை ஏற்றி, இனிமேல் நாய்களுக்கு சாப்பாடு வைக்க கூடாது என கூறிகொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து பிரிஜித்தா புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.