/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
12ம் தேதி மறியல் செய்ய முடிவு
/
12ம் தேதி மறியல் செய்ய முடிவு
ADDED : பிப் 07, 2026 03:12 AM

புதுச்சேரி: வரும் 12ம் தேதி, புதுச்சேரியில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது.
இது குறித்து முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., அலு வலகத்தில் மாநில பொதுச் செயலாளர் அந்தோணி கூறுகையில், 'நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்துசெய்ய வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், முகமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
புதுச்சேரி அரசு 2024ம் ஆண்டு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ம் தேதி, புதுச்சேரியில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது' என்றார்.
மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன், மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம் ஐ.என்.டி.யூ.சி., மாநில செயலாளர் ஜான்சன் தொ.மு.ச., மாநில தலைவர் அங்காளன் ஆகியோர் உடனிருந்தனர்.

