sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தரமற்ற மருந்து கொள்முதல் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை

/

தரமற்ற மருந்து கொள்முதல் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை

தரமற்ற மருந்து கொள்முதல் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை

தரமற்ற மருந்து கொள்முதல் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை


ADDED : நவ 10, 2025 03:54 AM

Google News

ADDED : நவ 10, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தரமற்ற மருந்து கொள்முதல் விஷயத்தில் கவர்னர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

அவர், கூறியதாவது:

தி.மு.க., காங்., கூட்டணி ஆட்சியில் தரமற்ற மருந்து கொள்முதல் செய்தது மற்றும் மதுபான உற்பத்தியில் லஞ்சம் பெற்றது உட்பட பல விஷயங்களில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், அப்போதைய காங்., அமைச்சர் ஒருவரும் ஊழல் சம்பந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முன்னாள் காங்., அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் குற்றச்சாட்டுகள் மீது கவர்னர் விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அவர்கள் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை.

இலங்கை நீதிமன்றம் அவர்களது நீதிமன்ற காவலை மீண்டும் நீட்டித்துள்ளது.

மீனவர்கள் விடுதலை விஷயத்தில் புதுச்சேரி அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களை ஜாமினில் எடுக்க அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி, உரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்' என்றார்.

பேட்டியின்போது, மாநில இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, துணைச்செயலாளர் நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us