ADDED : டிச 31, 2025 05:01 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொங்கலுக்கு 3,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்பு வழங்கிட கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடிமைப் பொருள் வழங்கல் துறை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரே ஷன் கடைகளை திறந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிட வேண்டும். தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும், பொங்கலுக்கு 3,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.
