ADDED : அக் 24, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார்.
நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரி சுபதா மாணவர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கிராமப்புற செவிலியர் செல்வமணி, சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் ஊர்வலத்தை வழி நடத்தினர்.
ஊர்வலம் நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், பண்டசோழநல்லுார் ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் எழில்வேந்தன் செய்திருந்தார்.