/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல் மருத்துவ கல்லுாரி மாணவர் தற்கொலை
/
பல் மருத்துவ கல்லுாரி மாணவர் தற்கொலை
ADDED : ஜூலை 31, 2025 03:11 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே பல் மருத்துவ கல்லுாரி இறுதியாண்டு மாணவர்தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த சுல்தான்பேட்டை, வளர்பிறை நகரை சேர்ந்தவர் ஹரிதேவன்; ராக் கல்வி நிறுவனங்களின் செயலர். இவரது மகன் கார்த்திக்ராஜா, 24; அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.
கல்லுாரியில் அதிகளவு படிக்க வேண்டி இருந்ததால்,மன விரக்தியில் இருந்தார்.
இதனிடையே ஹரிதேவன் வெளியூர் சென்றிருந்த நிலையில்,நேற்று மாலை 6:30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த கார்த்திக்ராஜா துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஹரிதேவன் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.