/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
தேசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 23, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் தேசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பாகூர் பேட்டில் பிரசித்தி பெற்ற தேசமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, லட்சுமி ேஹாமம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 8:10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.
8:45 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கும், 9:00 மணிக்கு மூலவர் கோபுரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலு உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.