/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிங்கிரிகுடி கோவிலுக்கு நாளை பக்தர்கள் புனித பாதயாத்திரை
/
சிங்கிரிகுடி கோவிலுக்கு நாளை பக்தர்கள் புனித பாதயாத்திரை
சிங்கிரிகுடி கோவிலுக்கு நாளை பக்தர்கள் புனித பாதயாத்திரை
சிங்கிரிகுடி கோவிலுக்கு நாளை பக்தர்கள் புனித பாதயாத்திரை
ADDED : ஜன 03, 2026 04:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி நரசிம்மப் பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றத்தின் சார்பில், சிங்கிரிகுடி கோவிலுக்கு 29ம் ஆண்டு புனித பாதயாத்திரை நாளை நடக்கிறது.
இது குறித்து, ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ கூறியதாவது;
புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், உலக நன்மை வேண்டி, ஆண்டுதோறும் ஜனவரி மாத ஞாயிற்றுக்கிழமையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த திருமாலடியார்களும், 30க்கும் மேற்பட்ட பஜனைக் குழுக்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிக பக்தர்கள் சிங்கிரிகுடி கோவிலுக்கு செல்லும் புனித பாதயாத்திரை நடந்து வருகிறது.
இந்த ஆண்டு, 29ம் ஆண்டு புனித பாதயாத்திரை பெருவிழா நாளை 4ம் தேதி காலை 6:00 மணியளவில், 30க்கும் மேற்பட்ட பஜனைக் குழுக்களுடன், புனித பாதயாத்திரை, புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, கடலுார் சாலை வழியாக சிங்கிரிகுடி கோவில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலைச் சென்றடையும்.
பாதயாத்திரை ஏற்பாடுகளை மன்ற பொருளாளர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, சுப்ரமணியன், கவுரவத் தலைவர்கள் பூவராகவன், ஜெயபிரகாஷ் செயலாளர்கள் முகுந்தன், விட்டல், நிர்வாகிகள் வெங்கடேஷ், அசோகன், ராஜேஷ். ஆகியோர் செய்திருக்கின்றனர்' என்றார்.

