sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டீசல் கடத்திய லாரி பறிமுதல்

 டீசல் கடத்திய லாரி பறிமுதல்

 டீசல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 01, 2026 09:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு டீசல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவி சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து, தமிழக பகுதிக்கு டீசல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் ரோந்து சென்றபோது, 100 அடி சாலையில் உள்ள பெட் ரோல் பங்கில் இருந்து புறப் பட்ட லாரியை மடக்கி, சோதனை நடத்தினர்.

அந்த லாரியில் டீசலுக்கு உண்டான உரிமம், முறையான ஆவணம் எதுவும் இல்லை. போலீசார் விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் வந்தவாசி ஜம்மம்பட்டு பகுதியை சேர்ந்த பாபு, 53; என்பதும் அவர் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு டீசல் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரையும், லாரியையும் போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, பாபுவை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். டீசல் கடத்தல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us