/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' வழங்கல்
ADDED : ஜூன் 25, 2025 01:12 AM

புதுச்சேரி : முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரன் வழங்கினார்.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் மாணவர் பதிப்பு பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் நிலை 2 கோமதி வரவேற்றார். தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரன் தலைமை தாங்கி, தனது சொந்த செலவில், இந்த கல்வியாண்டு முழுதும் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் நிலை 1 சின்னமேரி நன்றி கூறினார். ஆசிரியர் ஷீலா தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.