sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் வாழ்க்கை பற்றிய தெளிவு கிடைக்கும் ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேச்சு

/

'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் வாழ்க்கை பற்றிய தெளிவு கிடைக்கும் ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேச்சு

'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் வாழ்க்கை பற்றிய தெளிவு கிடைக்கும் ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேச்சு

'தினமலர் - பட்டம்' இதழ் படித்தால் வாழ்க்கை பற்றிய தெளிவு கிடைக்கும் ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேச்சு


ADDED : அக் 10, 2025 03:56 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'புதுமையான படைப்பாற்றலை, குழுவாக இணைந்து செயல்படுத்துபவர்கள் தான் இனிவரும் காலங்களில் ஜெயிக்க முடியும்'என, ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேசினார்.

புதுச்சேரியில் நடந்த 'தினமலர்-பட்டம்' இதழின் வினாடி -வினா போட்டி துவக்க விழாவில் அவர் பேசியதாவது:

இன்றைய குழந்தைகளின் உலகமே வேறு. நீங்கள் பார்க்க அனுபவிக்கக் கூடிய உலகமே வெவ்வேறாக இருக்க போகிறது.

எங்கள் காலக்கட்டத்தில் ஒரு தகவலை கூடுதலாக தெரிந்து வைத்திருந்தாலே பெரிய விஷயமாக பார்ப்பார்கள். 1990 வரை நம்முடைய தாத்தா காலத்தில் அதிக நிலம் வைத்திருந்தவர்கள் பணக்காரர் களாக இருந்தனர்.

இப்படி உலகம் பல மாற்றங்களை கண்டுள்ள நிலையில், இப்போது 'ஏ.ஐ.,' எனும் செயற்கை நுண்ணறிவு காலம். இப்போது உள்ளது 'இன்பர்மேஷன்' உலகமல்ல. 'இன்டலிஜன்ஸ்' உலகம். இந்த உலகத்தில் நீங்கள் திரட்டும் தகவல்களை 'இன்டலிஜன்சாக' மாற்ற வேண்டும். அதுதான் முக்கியமான விஷயம்.

தகவல்களை திரட்டிய பிறகு, அதனை புரிந்து கொண்டு, எதற்கு, எப்படி, யாருக்கு என பல்வேறு கேள்விகளாக தொடர்ந்து எழுப்பி விடைகளை பெற்றால் 'இன்டலிஜன்ஸ்' தானாக வந்துவிடும்.

தகவல் திரட்டுவது இன்றை ய உலகில் கடினமல்ல. ஏ.ஐ.,யை கேட்டால் உடனடியாக தந்துவிடும். தகவல்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.

இப்படி தகவல்கள் வைத்துள்ளவர்கள் தான் சிறந்தவர்களா என்றால், அதுவும் கிடையாது. பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் ஐடியா வைத்துள்ளவர்களுக்கு தான் இன்றைக்கு 'டிமாண்ட்'.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் படைப்பாற்றலுக்கு தான் டிமாண்ட் இருக்கும். புதுமையான படைப்பாற்றலுடன், அதனை குழுவாக இணைந்து செயல்படுத்துபவர்கள் தான் ஜெயிக்க முடியும். ஒவ்வொரு துறையும் ஒன்றிணைந்து வருகிறது. அதனால் யு.ஜி.சி., எந்த படிப்புகளையும் படியுங்கள் என்று அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டுள்ளது. பள்ளி கூடத்திற்கு கூட ஓபன் புக்கினை பற்றி விவாதிக்க துவங்கிவிட்டனர். எனவே 'கம்யூனிகேஷன்' திறமையை வளர்த்து கொண்டு, படிப்பதை, தகவல் திரட்டுவதை, புதுமையான ஐடியாவை, படைப்பாற்றலை, ஒருங்கிணைந்து செயல்படுத்துபவர்கள் தான் இனி வரும் உலகில் ஜெயிப்பார்கள்.

அந்த பண்புகளைத்தான் 'தினமலர்' பட்டம் இதழ் உங்களிடம் வளர்க்கிறது. உலகம் எப்படி மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்த மாற்றங்களை பட்டம் இதழ் கொண்டு வந்து சேர்க்கிறது. பட்டம் இதழ் படித்தால் உங்கள் வாழ்வை பற்றி உங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us