/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு கடலுாரில் வரும் 3ம் தேதி நடக்கிறது
/
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு கடலுாரில் வரும் 3ம் தேதி நடக்கிறது
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு கடலுாரில் வரும் 3ம் தேதி நடக்கிறது
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு கடலுாரில் வரும் 3ம் தேதி நடக்கிறது
ADDED : பிப் 01, 2024 04:52 AM
புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழ் நடத்தும் ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா, கடலுாரில் நாளை மறுநாள் (3ம் தேதி) நடக்கிறது.
'தினமலர்' நாளிதழ், ராஜ் டி.வி.எஸ்., நிறுவனத்தின் புதுச்சேரி மற்றும் கடலுார் கிளைகள், கடலுார் சுமங்கலி சில்க்ஸ் இணைந்து நடத்தும் 'பள்ளி ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு' மற்றும் 'லட்சிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா', நாளை மறுநாள் 3ம் தேதி, கடலுார் செங்குந்தர் திருமண மண்டபத்தில், காலை 9:30 மணி முதல், மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.
விழாவை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் சென்னை விற்பனை மேலாளர் அர்ஜூன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். புதுச்சேரி கல்வியாளர் புகழேந்தி, சென்னை அட்வான்ஸ்டு சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி மதுமிதா கோமதிநாயகம் ஆகியோர், பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் மன அழுத்த பிரச்னைகள் குறித்தும், அதனை சரி செய்வதற்கான தீர்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கின்றனர்.
சிறப்பு அமர்வை தொடர்ந்து கலந்துரையாடல் நடக்கிறது. இதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு கல்வியாளர் புகழேந்தி, மதுமிதா கோமதிநாயகம் விளக்கம் அளிக்கின்றனர்.
கருத்தரங்கில் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட ஆசிரியர்கள் 97902 25651 என்ற மொபைல் எண்ணிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்கள் 95247 81197 என்ற மொபைல் எண்ணிலும் தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும்.
புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட ஆசிரியர்கள் 97902 25651 என்ற மொபைல் எண்ணிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்கள் 95247 81197 என்ற மொபைல் எண்ணிலும் தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும்.