/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல்
/
திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல்
ADDED : ஏப் 02, 2025 05:28 AM

புதுச்சேரி : வில்லியனுார் தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கினார். தொடர்ந்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் 21 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதில், சமூக நலத்துறை இணை இயக்குநர் ஆறுமுகம், கண்காணிப்பாளர் திருமுருகன், அதிகாரிகள் பிரதாப், ஆனந்த், அன்பரசன், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், அவைத்தலைவர் ஜலால், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

