/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளம் தொகுதியில் உதவி தொகை வழங்கல்
/
உப்பளம் தொகுதியில் உதவி தொகை வழங்கல்
ADDED : செப் 19, 2025 03:04 AM

புதுச்சேரி: உப்பளம் தொகுதியைச் சேர்ந்த தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், உப்பளம் தொகுதியைச் சேர்ந்த தொடர் நோய் பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறும் ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், வட்டார காங்., தலைவர் லட்சுமணன், தி.மு.க. தொகுதி துணை செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, காங்., முன்னாள் மகளிர் அணி தலைவி பஞ்சகாந்தி, தி.மு.க., கிளை செயலாளர்கள் இருதயராஜ், செல்வம், ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.