ADDED : நவ 06, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : லிங்காரெட்டிப்பாளையத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, லிங்காரெட்டிப்பாளையம் தனியார் ஓயின்ஷாப் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்த வானுார், ரங்கநாதப்புரம் மேட்டு தெருவை சேர்ந்த கந்தன், 33; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

