தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாவட்ட அளவில் கலா உத்சவ் போட்டி: ஜவகர் பால் பவனில் துவங்கியது

மாவட்ட அளவில் கலா உத்சவ் போட்டி: ஜவகர் பால் பவனில் துவங்கியது

மாவட்ட அளவில் கலா உத்சவ் போட்டி: ஜவகர் பால் பவனில் துவங்கியது


ADDED : நவ 06, 2025 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் ஜவகர் பால் பவனில் நேற்று துவங்கியது.

புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சமகர சிக்ஷாவால் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி ஜவகர் பால் பவனில் வாய்ப்பாட்டு, இசை, மற்றும் ஓவியம், கைவினை ஆகிய பிரிவுகளில் நடந்தது. இப்போட்டியை சமகர சிக்ஷா திட்ட இயக்குநர் எழில்கல்பனா துவங்கி வைத்தார்.

தொடர்ந்து நடந்த போட்டியில், 106 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பாரதியார் பல்கலைக்க கூட பேராசிரியர்கள், கலைமாமணி விருது பெற்ற பால்பவன் இசை வல்லுநர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

இன்று 6ம் தேதி தனி நடனம், குழு நடனம், கம்பி கருவிகள், தாள கருவி உள்ளிட்ட இசைக்கருவிகள் மீட்டல் ஆகிய போட்டிகளும், நாளை 7ம் தேதி நாடகம் மற்றும் பாரம்பரிய கதை சொல்லல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஜவகர் பால்பவன் தலைமையாசிரியர் மணிவேல் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us