sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விவாகரத்து கேட்டு வழக்கு தொடுப்போரை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது: ஐகோர்ட்

/

விவாகரத்து கேட்டு வழக்கு தொடுப்போரை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது: ஐகோர்ட்

விவாகரத்து கேட்டு வழக்கு தொடுப்போரை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது: ஐகோர்ட்

விவாகரத்து கேட்டு வழக்கு தொடுப்போரை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது: ஐகோர்ட்


ADDED : அக் 24, 2024 12:53 AM

Google News

ADDED : அக் 24, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னையை சேர்ந்த தம்பதியர், திருமணத்துக்கு பின் அமெரிக்கா சென்றனர். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. பரஸ்பர விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கணவன் - மனைவி இருவரும் காணொலி வாயிலாக ஆஜராகினர். துாதரகம் வாயிலாக காணொலியில் ஆஜராகாததால், அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய, குடும்ப நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல் மற்றொரு தம்பதியினரும், துாதரகம் செல்லாமல், அமெரிக்காவில் உள்ள தங்கள் வீட்டில் இருந்து, காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க கோரி, மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:

உலகத்தின் எந்த பகுதியில் இருப்பவர்களும், காணொலி வாயிலாக விசாரணை நடவடிக்கைகளில் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அதனால், வழக்கு விசாரணையின் முதல் கட்டத்தில் இருந்து முடியும் வரை, சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும் என்பதை வற்புறுத்தாமல், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணை நடப்பதை, குடும்ப நல நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

தொழில்நுட்ப ஆட்சேபனைகளை எழுப்பாமல், எந்த கட்டத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகும்படி, குடும்ப நல நீதிமன்றம் வற்புறுத்தக் கூடாது. பயண கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால், வழக்கு தொடுத்தவர்களால் நேரில் ஆஜராவதில் சிக்கல்கள் உள்ளன.

இதனால், பரஸ்பர விவாகரத்து கோரும் வழக்குகள் பெரும்பாலும் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட, சில வழிமுறைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

l விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்யும் போதும், அடுத்த கட்ட விசாரணைகளின் போதும், கணவன் - மனைவி நேரில் ஆஜராகும்படி, குடும்ப நல நீதிமன்றங்கள் வற்புறுத்தக் கூடாது.

l நேரடியாகவோ அல்லது பவர் ஆப் அட்டர்னி வாயிலாகவோ, வழக்கு தாக்கல் செய்யலாம். பவர் ஆப் அட்டர்னி, பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

l வழக்கு தொடுத்தவர்கள் சார்பில், 'பவர் ஆப் அட்டர்னி' ஆஜராகலாம். அத்தகைய பவர் ஆப் அட்டர்னி, வழக்கறிஞராக மட்டும் இருக்கக் கூடாது.

l உரிய ஆவணங்களுடன், வழக்கை, பவர் ஆப் அட்டர்னி அளிக்கலாம். தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து, காணொலி வாயிலாக, கணவன் - மனைவி ஆஜராகலாம். இருக்கும் இடம், அவர்களின் அடையாளத்தை, உரிய ஆவணங்கள் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும்.

l காணொலி வாயிலாக ஆஜராபவர்களிடம், ஆவணங்கள், மனு, பிரமாண பத்திரத்தை நீதிமன்றம் சரிபார்த்துக் கொள்ளலாம். சாட்சியங்களையும் பதிவு செய்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.

இந்த இரண்டு வழக்குகளை பொறுத்தவரை, தம்பதியினரின் திருமணம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us