/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை
/
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை
ADDED : டிச 26, 2024 05:56 AM

புதுச்சேரி: முன்னாள் எம்.எல்.ஏ., மனைவியை தாக்கியதை கண்டித்து, பா.ஜ.,வினர், மறியல் செய்ததை தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷனிற்குள் புகுந்து ரகளை செய்து, போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
முதலியார்பேட்டை, ஜோதி நகரை சேர்ந்தவர், பா.ஜ., முன்னாள் எல்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவியை, பாக்கத்து வீட்டில் இருந்தவர்கள் தாக்கினர். அதை கண்டித்து, பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக்பாபு தலைமையில், அக்கட்சியினர் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு, முதலியார்பேட்டை, போலீஸ் ஸ்டேஷன் முன், இரவு 9:45 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.
போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாக்கியவர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து, மறியல் செய்தவர்கள் 11:30 மணியளவில் கலைந்து சென்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையறிந்து ஆத்திரமடைந்த முதலியார்பேட்டை, தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்தின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர், நள்ளிரவு 12:00 மணியளவில், முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குள், புகுந்து எப்படி வழக்குப் பதிவு செய்யலாம் என, ஆக்ரோஷத்தோடு, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசாரை தள்ளி, தாக்க முயற்சி செய்தனர்.
இதனால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார், அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

