sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பதவியை பறிக்க வேண்டும் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

/

பதவியை பறிக்க வேண்டும் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பதவியை பறிக்க வேண்டும் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பதவியை பறிக்க வேண்டும் தி.மு.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : மே 03, 2025 04:53 AM

Google News

ADDED : மே 03, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அறிவித்த ஜான்குமார் எம்.எல்.ஏ., அல்லது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இருவரில் ஒருவரது பதவியை பறிக்க வேண்டும் என, தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் எம்.எல்.ஏ., புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இங்கு உள்ளவர்களால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது என்றும், இதுகுறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என, பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சரி இல்லை என, தி.மு.க., சட்டசபையில் குரல் கொடுத்து வருகிறது. எங்களின் கருத்து உண்மை என்றுஏற்று, உள்துறை அமைச்சரை கண்டித்த ஜான் குமார் எம்.எல்.ஏ.,வுக்கு பாராட்டுக்கள்.

ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் பா.ஜ., எம்.எல்.ஏ.,வாகவும், முதல்வரின் பாராளுமன்ற செயலராக உள்ள ஜான்குமார், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என, கூறியிருப்பதற்கு, முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

ஜான்குமாரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் உள்துறை பொறுப்பு வகிக்கும் நமச்சிவாயத்தையும்; சட்டம் ஒழங்கு சரியாக இருந்தால், ஜான் குமாரை முதல்வரின் பாராளுமன்ற செயலர் பதிவிலிருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us