ADDED : செப் 25, 2024 06:20 AM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: கோவில் திருப்பணிக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நன்கொடை வழங்கினார்.
உழவர்கரை தொகுதி, கம்பன் நகர் மற்றும் மரியாள் நகரில் உள்ள அன்னை மகாலட்சுமி கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு, உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர். நாராயணசாமி, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்., பிரமுகர் கோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
