சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை
சுற்றுலா பயணிகளிடம் அபராதம் வேண்டாம்: முதல்வர் அறிவுரை
ADDED : அக் 20, 2024 05:26 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : சுற்றுலா பயணிகளை குறி வைத்து அபராதம் விதிக்க வேண்டாம் என, முதல்வர் ரங்கசாமி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
இ.சி.ஆரில் கருவடிக்குப்பம் அருகே நேற்று மாலை, வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற முதல்வர் ரங்கசாமி, போலீசார் அருகே வாகனத்தை நிறுத்துமாறு கூறினார். பின், போலீசாரை பார்த்து, சாலை விதிமுறைகளை மீறுவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதியுங்கள். சுற்றுலா வருபவர்களை குறி வைத்து அபராதம் விதிக்க வேண்டாம் என, போலீசாரிடம் அறிவுறுத்தி விட்டு சென்றார்.
