ADDED : டிச 10, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆட்டோ டிரைவரை பேனா கத்தியால் குத்திய மற்றோரு டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
சண்முகாபுரத்தை சேர்ந்தவர் டேவிட் பெரியநாயகம் ஆரோக்கியராஜ், 38, இவர், மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துனையில் ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அங்கு நின்ற போது, அதே ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வரும், ராமச்சந்திரன் என்பவர், பேனா கத்தியால், அவரை குத்தினார். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனை தேடிவருகின்றனர்.

