நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; சேதராப்பட்டு குமரன் நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 59; டிரைவர். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தவர், அவரது அறைக்கு சென்றார். பின் அவரது மனைவி குப்பு அவருக்கு சாப்பாடு எடுத்து கொண்டு சென்றபோது நாராயணசாமி அவரது அறையில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தொங்கி கொண்டிருந்தார்.
உடன் அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.