ADDED : பிப் 01, 2024 05:14 AM
புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த ஐந்து நாள் பயிற்சிப்பட்டறை நடந்தது.
ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதல்படி, கல்லுாரி முதல்வர் குருலிங்கம் முன்னிலையில், ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் 'யூ கேன்பிளே ட்ரோன் டெக்னாலஜஸ் மூலம் முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம், உருவகப்படுத்துதல், நேரடி விமானப் பயன்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தனர்.
இப்பயிற்சியை நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணன் மற்றும் ஆச்சார்யா இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நடத்தப்பட்டது.
ஏற்பாடுகளை ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குழு தலைவர் ஆனந்த் மற்றும் முதலாமாண்டு வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியாசெய்திருந்தனர்.