sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போதை ஸ்டாம்பு விற்றவர் கைது

/

 போதை ஸ்டாம்பு விற்றவர் கைது

 போதை ஸ்டாம்பு விற்றவர் கைது

 போதை ஸ்டாம்பு விற்றவர் கைது


ADDED : பிப் 08, 2026 04:09 AM

Google News

ADDED : பிப் 08, 2026 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்பு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் இரவு சோனாம்பாளையம் சந்திப்பில் ரோந்து சென்றனர்.

அப்போது, பொதுப்பணித்துறை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே வாலிபர் ஒருவர், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.

அங்கு சென்ற போலீசார், சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், 18 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் 10 எல்.எஸ்.டி (ஸ்டாம்பு) போதை பொருளை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தார். விசாரணையில், வைத்திக்குப்பம் மோகன் மகன் சந்தோஷ், 25, என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்பை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us