/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிபோதையில் தகராறு: வாலிபர் கைது
/
குடிபோதையில் தகராறு: வாலிபர் கைது
ADDED : அக் 23, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கொடாத்துாரில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொடாத்துார் மூன்று முனை சாலை சந்திப்பு அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூராக தகராறு செய்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், தமிழகப் பகுதியான சிவபெருமான்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரத்குமார், 26; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.