ADDED : டிச 23, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7;௦௦ மணியளவில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கடலுார் மாவட்டம் நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்த சக்தி ஜெயசீலன் 48, என்பவர், மதுபோதையில் உறுவையாறு மங்கலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

