தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ-விதான் செயலி கால விரயத்தை குறைக்கும்: சபாநாயகர் செல்வம்

இ-விதான் செயலி கால விரயத்தை குறைக்கும்: சபாநாயகர் செல்வம்

இ-விதான் செயலி கால விரயத்தை குறைக்கும்: சபாநாயகர் செல்வம்


ADDED : ஜூன் 10, 2025 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் தேசிய இ-விதான் செயலி துவக்க விழாவில் சபாநாயகர் செல்வம் பேசியதாவது:

உலக நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது நாடும் தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

தற்போது, பிரதமரின் டிஜிட்டல் மயமாக்கம் காரணமாக மொபைல் மூலம் அனைத்து வகையான வங்கி பரிவர்த்தனை விரைவாக செய்ய முடிகிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அரசு நிர்வாகம் மற்றும் மக்களின் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க டிஜிட்டல் இந்தியா திட்டம் உறுதி கொண்டுள்ளது. 2047 ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு, சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் 1963ம் ஆண்டு முதல் சட்டசபை நிகழ்வுகள் புத்தக வடிவில் உள்ளது.

தற்போது சுமார் 3 லட்சம் பக்கங்கள் ஒலி வடிதல் செய்யப்பட்டு, நேவா செயலியில் பதிவிறக்கம் செய்தவதற்கு தயார் நிலையில் உள்ளது.

அதன் பிறகு கடந்தகால சட்டசபை நிகழ்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்றார்.

இந்த நேவா செயலி செயல்பாடு சட்டசபை கேள்வி மற்றும் பதில் அளிப்பதில் மிகுந்த கால விரியத்தை குறைக்கும் என கருதுகின்றேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us